கண்கண்ணாடி உதவி தொகை


தொழிலாளர்கள் மூக்கு கண்ணாடி வாங்கியதற்கான தொகையை மீளப் பெறுவதற்கான விண்ணப்பம்

மருத்துவச் சான்று மற்றும் ரொக்க பட்டியலின் பேரில் தொழிலாளர்கள் மூக்குக் கண்ணாடி வாங்கியமைக்காக ரூ.1000/- வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.

உதவி பெறுவதற்கு தகுதிகள்

  • தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும்.
  • தொழிலாளியின் மாத ஊதியம் ரூ.25,000/-க்கு (அடிப்படை மற்றும் அகவிலைப்படி) மிகாமல் இருக்க வேண்டும்.
  • தொழிலாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

மனுதாரர் இணைக்க வேண்டிய சான்றுகள்

  • மருத்துவ பரிசோதனை இரசீது.
  • கண்ணாடி வாங்கிய இரசீது.
  • குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல்.
  • தொழிலாளர் நல நிதி செலுத்திய பெயர் பட்டியல் மற்றும் தொழிலாளர் நல நிதி ரூ,10/- பிடித்தம் செய்யப்பட்ட சம்பள இரசீது.
  • தொழிலாளியின் சம்பளச் சான்றிதழ்.
  • வங்கி கணக்கு புத்தக நகல் (முதல் பக்கம்) – 2.


பதிவிறக்க